Tuesday 26 December 2017

(74)காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

இலக்கியம், கலை, திரைப்படம், அனுபவம், பொது என்ற வகைகளில் மொத்தமாக‌ 50 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய வாசிப்புக்கு புதிதாக நுழைபவர்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிறந்த வழிகாட்டியாக அமையும். அந்த  வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த புத்தகத்தினூடாக பல முக்கிய புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 
வங்காள எழுத்தாளர் போதி சத்வ மைத்ரேய 1980 இல் எழுதிய Jhinuker Peter Mukto என்ற நாவலைப் பற்றியதே முதலாவது கட்டுரையான சிப்பியின் வயிற்றில் முத்து. இந்த நாவலை எஸ். கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாக கொண்டது.
தொடர்ந்து வரும் கட்டுரைகளில் மௌனி, அழகிரிசாமி பற்றியும் எரியும் பனிக்காடு, இடைவெளி ஆகிய நாவல்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்ற கட்டுரை மிக முக்கியமானது. 'சித்திரப் புலி' என்ற comics புத்தகங்கள் பற்றிய கட்டுரையில் தனக்கு மிகவும் பிடித்த comic book ஆன Calvin and hobbes பற்றி எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முக்கியமானவை.

No comments:

Post a Comment