Saturday 3 June 2017

திருப்புகழ் - 3

 பத்தியால் யானுனைப்  பலகாலும்
   பற்றியே மா திருப்புகழ் பாடி   
முத்தனா மாறெனைப்   பெருவாழ்வின்   
   முத்தியே சேர்வதற்   கருள்வாயே    
உத்தமா தானசற்   குணர்நேயா   
   ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா   
வித்தகா ஞானசத்    திநிபாதா   
   வெற்றிவே லாயுதப் பெருமாளே


ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே!

இருவினையின் மதிமயங்கித்    திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற்    றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட்    டுணர்வாலே
பரவு தரிசனையை யென்றெற்    கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப்     புலவோனே
சிவனருளு முருக செம்பொற்     கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க்     கெளியோனே
கனகசபை மருவு கந்தப்     பெருமாளே.

துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத்  தெளிவோனே
செய்யகும ரேசத்  திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளி மணவாளப்  பெருமாளே.

 மாதர்வச மாயுற்           றுழல்வாரும்
   மாதவமெ ணாமற்        றிரிவாரும்
தீதகல வோதிப்            பணியாரும்
   தீநரக மீதிற்              றிகழ்வாரே
நாதவொளி யேநற்            குணசீலா
   நாரியிரு வோரைப்      புணர்வேலா
சோதிசிவ ஞானக்              குமரேசா
   தோமில் கதிர்காமப்     பெருமாளே.

No comments:

Post a Comment