Thursday 29 December 2016

(63) ஒன்றுக்கும் உதவாதவன் - அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம் எப்போதும் என் பிரியத்துக்கு உரிய எழுத்தாளர். அவரது 'ஒன்றுக்கும் உதவாதவன்'  58 கதைகளைக் கொண்ட  தொகுப்பு. வழமை போல் இனிமையான மனதை நெகிழ வைக்கும் கதைகளே இவை. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை.

வியட்நாம் போர் உக்கிரத்தை உலகத்திற்கு காட்டிய புகைப்படத்தில் இருந்த சிறுமியை அவர் கனடாவில் சந்தித்த அனுபவங்களை எரிந்த சிறுமி என்ற கதையில் எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த நண்பரைப் பற்றிய ஆறாத்துயரம் கதை என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று.

No comments:

Post a Comment