Wednesday 9 March 2016

(51) அம்மாவுக்கு ஒரு நாள் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் 27 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. 1950 - 60 இல் எழுதப்பட்டவை.

அம்மா படம் பார்க்க செல்லவேண்டும் என ரகுவை அன்று வேளைக்கு வீட்டுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறார். அந்தப் படத்தில் நீ பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை எனக் கூறி வேலைக்கு கிளம்பும் ரகு பின் சீக்கிரமாக வீட்டுக்கு போக நினைத்தும் முடியாமல்ப் போய்விடுகிறது. ரயில் தாமதமாகி விட பஸ்ஸில் போக பணமில்லாமல் தவிக்கிறான். வீட்டிற்கு தாமதமாகவே வருகிறான். " நீ சினிமாவுக்கு போகவில்லையா?" என அர்த்தமில்லாமல் கேள்வி கேட்கிறான். அம்மாவுக்கு கோவித்துக் கொள்ளவே தெரியாது. தனக்கு ஏன் சீக்கிரம் வரமுடியவில்லை என்பதை சொல்வதால் பயன் ஒன்றும் இல்லை என சொல்லாமலே விட்டுவிடுகிறான்.
 - அம்மாவுக்கு ஒரு நாள் சிறுகதை




அனைத்துமே படிக்க வேண்டிய சிறுகதைகள்.