Saturday 16 August 2014

(33) யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு - செங்கை ஆழியான்

  புத்தகம் போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழயுத்தம் 1, ஈழயுத்தம் 2 என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1621  போர்த்துக்கேயர் சங்கிலி செகராசசேகரனை தோற்கடித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொள்கிறார்கள். இதற்கு கப்பித்தான்மேஜர் பிலிப் தே ஒலிவேறா தலைமை தாங்கினான். இன்று முத்திரைச்சந்தியில் தேவாலயம் இருக்கும் இடத்தில் இருந்த பழைய நல்லூர் கோயிலை தரைமட்டமாக்கினான். ஒலிவேறா  யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போதும் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடைபெற்றன. இதனால் தமது பாதுகாப்பு கருதி கோட்டை அமைப்பது என முடிவு செய்து யாழ்கட‌லுக்கு அண்மையான இடத்தை தெரிவு செய்தான். அவன் அமைத்த கோட்டை சதுர வடிவிலானது. கோயிலை உடைத்ததால் பெறப்பட்ட கற்கள் இதற்கு பய‌ன்படுத்தப்பட்டன.

1658 இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு கொமுசாறி வன்ஹூன்ஸ் என்பவன் தலைமை தாங்கினான். கோட்டையை சுற்றிவளைத்து உணவுப்ப்ரச்சினையை ஏற்படுத்தி அதன் பின்னரே யுத்தம் நடைபெற்றது. சரணடைந்த போர்த்துகேயரை எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல விடவில்லை. அவர்களை கோவாவிற்கும் பத்தேயாவிற்கும் அனுப்பினார்கள். 1662 இல் வன்ஹூன்ஸ் இலங்கை முழுவதற்கும் ஆளுனராக வந்தான்.  இவன் காலத்தில் டொன்லூயிஸ் (இவன் தான் பூதத்தம்பி எனவும் சொல்பவர்கள் உண்டு) என்பவன் தலைமையில் ஒல்லாந்தருக்கு எதிராக நடைபெறவிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஒல்லந்தர் யாழ்கோட்டையை மீளப்புதுப்பித்து கடினார்கள். இது ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இதை  1680 இல் கட்டி முடித்தனர். 1792 இல் கோட்டையின் வெளியமைப்பு கட்டி முடிக்கப்பட்டது.  கீழைத்தேசத்தில் உள்ள கோட்டைகளில் யாழ் கோட்டை யே மிகப் பலமானதும் பாதுகாப்பானதும் என சொல்லப்படுகிறது.

 1795 செப்ரெம்பர்  28 இல் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. ஒல்லாந்தர் கோட்டையை கட்டி முடித்து மூன்று வருடத்தில் இது நடந்திருக்கிறது. ஸ்ரூவார்ட் தலைமையில் ஆங்கிலேயர் முன்னேறி ஒல்லாந்தரை சரணடையுமாறு செய்தி அனுப்பினார்கள். ஒல்லாந்தர் போர்த்துக்கேயருக்கு செய்தது போல் செய்யவில்லை. அவர்களது உடமைகளுடன் யுத்தக்கைதிகளாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதிலிருந்து 1948 வரை யாழ் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருந்தது.இதன் பின் ஈழ யுத்தம் இரு தடவைக‌ள் கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றது. யாழ் கோட்டையை மையமாக வைத்து நான்கு போர்கள் நடைபெற்றுள்ளன.

யாழ் கோட்டையின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒல்லாந்தர் கட்டிய கோட்டையின் அமைப்பு விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment