Thursday 14 August 2014

(31) கடலில் ஒரு துளி - இந்திரா பார்த்தசாரதி

      
  இந்திரா பார்த்தசாரதி இந்தியாவின் உயர்ந்த  இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருதை  'குருதிப்புனல்' என்ற நாவலுக்காகப் பெற்றுக்கொண்டவர். 'கடலில் ஒரு துளி 'எனும் இப்புத்தகம் ஒரு கட்டுரைத் தொகுதி ஆகும். தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல்-சமூகம், நாடகம் என ஐந்து தலைப்புகளில் மொத்தமாக 42 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

 தமிழ் இலக்கியம் எனும் முன் பகுதியில் திருப்பாவை, திருக்குறள், கலித்தொகை என தமிழின் தொன்மையான நூல்கள் சிலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். தமிழில் அருமையான புத்தகங்கள் நிறைய உள்ளன என்பது இப்படியான புத்தகங்கள் வாசிக்கும் போது நினைவில் வரும். முதலில் வாசிப்பதற்கு சுலபமான திருப்பாவையையாவது படிக்க வேண்டும்.   

அரவிந்த் அடிகாவின் (The White tiger ) என்ற நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்ததையொட்டி எழுதிய விமர்சனத்தில், இந்த நூலைப் படித்த போது தனக்கு 'Mother India' என்ற நூல் தான் நினைவுக்கு வந்ததாகவும் காந்தி 'Mother India' வை 'A sanitary inspector's report' என விமர்சனம் செய்ததாகவும் எழுதியுள்ளார். அரசியல்-சமூகம் சார்ந்த பகுதியில் எழுதியுள்ள விடயங்கள் முக்கியமானவை. இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றியும் எழுதத் தவறவில்லை. மொழிக்காக பிரிந்த முதல் நாடு பங்களாதேஷ் என்பது எனக்கு புதிய‌ செய்தி. 

No comments:

Post a Comment