Monday 21 July 2014

(21) சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

சகுனம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  எஸ்.வி.ராமகிருஷ்ணனின் 'சகுனம்' ஒரு சுவையான‌ கட்டுரைத் தொகுப்பு ஆகும். குறிப்பாக 1930 - 1960  வரையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூறுகிறார். முக்கியமான, பலருக்கு தெரியாத பல தகவல்கள் அடங்கிய புத்தகம்.

இன்று 29 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பிரிவினைக்கு முன் 11 மாகாணங்களும்  கிட்டத்தட்ட 600 சுதேச சமஸ்தானங்களும் இருந்துள்ளன. பர்மா கூட செயற்கையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்து பின் 1937 இல் தனி நாடாகியிருக்கிறது. 40 வருடமாக தடை செய்யப்பட்டிருந்த 'வந்தேமாதரம்' பாடல் சுதந்திர தினத்தன்று அவரது பாடசாலையில் பாடப்பட்ட  நிகழ்வை நினைவு கூறுகிறார்.

ஆகாசவாணி - பெயரே இனிமையான ஒன்று தான். அந்த அருமையான பெயர் எப்படி திமுகவினால் இல்லாமல் போனது என்பது வாசிக்க கஷ்டமாக தான் இருக்கிறது. 'ஆகாசவாணி' கட்டுரையில் அந்த நாளைய வானொலிகள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன.

தமிழ் நாடு, ஆந்திர பிரிவினை பற்றிய கட்டுரையில் சென்னையை ஆந்திராவுடன்  இணைக்க ஆந்திரர்கள் செய்த முயற்சி பற்றியும் அது தடுக்கப்பட்ட நிகழ்வையும் கூறுகிறார். 1-10-1953 இல் ஆந்திரம் பிறந்திருக்கிறது.இந்திய பொதுத்தேர்தலின் அறுபதாண்டு பரிமாணம் என்ற கட்டுரை  ஆரம்ப கால வாக்கு பதியும் முறை ,  தேர்தல் வரலாறு பற்றிய சிறு அறிமுகம் என்பவற்றிற்கு முக்கியமானது.

1930 இல் நேரு, சுபாஷ் போன்றவர்கள் பூரண சுய ராஜ்ஜியம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று சங்கல்ப்பம் எடுத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து 1947 இல் சுதந்திரம் கிடைக்கும் வரை வருடந்தோறும் தை 26 ஐ சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டிருக்கிற‌து. பின் அது குடியரசு தினமாகிவிட்டது.

இது தவிர பாண்டிச்சேரி பற்றிய அந்த நாள் குறிப்புகள், மதராஸ் டிராம் பற்றிய தகவல்கள் என்பன முக்கியமான‌வை ஆகும்.

 



No comments:

Post a Comment