Friday 27 June 2014

(16) மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

மதில்கள்வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்:  சுரா

பஷீரின் 'மதில்கள்' 38 பக்கங்கள் மாத்திரமே கொண்ட குறு நாவல் ஆகும். எழுத்தாளர் பஷீரே கதையின் நாயகனாக வருகிறார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்ட  பஷீருக்கு நாராயணி என்ற பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. ஆண், பெண் சிறையை பிரிக்க ஒரு மதிலே இருக்கிறது.மதிலுக்கு அந்த பக்கம் இருக்கும் பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியும் பஷீரும் கதைத்துக்கொள்கிறார்கள். முதலில் சிறையில் இருந்து தப்பி செல்ல நினைக்கும் பஷீர் நாராயணியுடன் கதைக்க தொடங்கிய பின் அந்த எண்ணத்தை கைவிடுகிறார். சுவருக்கு அப்பால் கம்பு தெரிந்தால் மதிலுக்கு அப்பால் நாராயணி நிற்பதாக அர்த்தம். இருவரும் வார்த்தைகளை பரிமாறுகிறார்கள். இருவரும் சந்தித்து கொள்ள வைத்தியசாலை மட்டுமே ஒரு இடமாக இருப்பதால், ஒரு குறித்த நாளை சொல்லி அன்று எப்படியாவது அங்கு வருமாறு பஷீரிடம் நாராயணி சொல்கிறாள். இருவரும் சந்திக்கும் போது ,  நாராயணி  முகத்தில் மச்சம் இருப்பதை வைத்தும்  பஷீர் கையில் ரோஜாப்பூ வைத்திருப்பதைக்கொண்டும்   ஒருவரை ஒருவர் அடையாளம் காண  நினைக்கிறார்கள். பஷீரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அன்று எதிர்பாராமல் அவர் சிறையில் இருந்து விடுதலையடைகிறார். சிறையிலிருந்து விடுதலையாக யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர் சொல்கிறார்.  வை  ஷூட் ஐ பி ஃப்ரீ?ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?

விடுதலை, யாருக்கு வேண்டும் இந்த விடுதலை



பஷீர் சிறையை விட்டு வரமுன் ஒரு ரோஜாவை பறித்துக்கொள்கிறார். ஜெயிலின் கதவு பின்னால் மூடிக்கொள்கிறது.

இது உண்மையில் நடந்த கதையா தெரியவில்லை. பஷீர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என படித்திருக்கிறேன்.


நான் வாசித்த புத்தகத்தை  சுரா மொழிபெயர்த்திருக்கிறார். இணையத்தில் கிடைத்த படத்தில் சுகுமாரன் மொழிபெயர்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நாவல் மம்முட்டி நடிப்பில், ஆடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. Poster இல் இருக்கும் மலையாளம் விளங்கவில்லை. ஆனால் கையில் ரோஜா செடியுடன் இருப்பதால் மதில்கள் பட  Poster ஆக தான் இருக்க வேண்டும்.



 

No comments:

Post a Comment