Sunday 5 August 2012

புத்தகங்கள்

வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் -3
 
1.  ரெயினீஸ் ஐயர் தெரு  - வண்ணநிலவன் 
 ஆறு வீடுகளைக் கொண்ட சிறிய வீதியை வைத்து எழுதப்பட்ட நாவல்

2.  சொல்லில் அடங்காத இசை - ஷாஜி
   இசை , இசைக்கலைஞர்கள் குறித்த கட்டுரைகள். 

3. கண் பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்
    நா.முத்துக்குமாரின் திரைப்பாடல்கள் மனதுக்கு மிக நெருக்கமாக தோன்றும். தனது சில  பாடல்கள் உருவான கதையை த்தொகுப்பில் பதிவு செய்துள்ளார். ரொம்ப நன்றாக இருக்கும்.

4.  சதுரகிரி யாத்திரை - பி. சுவாமிநாதன்
    சதுரகிரி பற்றி தெரிந்து கொள்ள வாங்கி வாசித்தேன். பலர் தமது  அனுபவங்களை  கூறியுள்ளார்கள். கட்டாயம் ஒரு தடவை போக வேண்டும்.

5. ஆ - சுஜாதா
    குரல்கள் பற்றிய நாவல். சுஜாதா பாணியில் நன்றாக இருக்கும்.

6. பார்வை 360 - சுஜாதா
    சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்

7. மூங்கில் மூச்சு - சுகா
 தனது அனுபவங்களை சுவாரகசியமாக சொல்லியிருப்பார். திருநெல்வேலி கதைகள், நண்பன் பற்றிய வசனங்கள் நன்றாக இருக்கும். சுகா 'படித்துறை' என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

8. மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்(பாகம் 1 ,2) - சுவாமி சுகபோதானந்தா

9. அக்பர் - க.வெங்கடேசன்
ஜோதாஅக்பர் படம் பார்த்த கையோட அக்பர், ஜோதா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் வாங்கியது.நிறைய விடயங்கள் இருந்தாலும் ஜோதா பற்றி ஒரு வசனம் மட்டும் தான் இருந்தது.

10. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
வரலாறை சுவையாக படிக்கலாம் என்று தெரிந்து கொண்ட புத்தகம். முகலாய அரசர்களை பற்றியது.


 

No comments:

Post a Comment